×

ஓரினச்சேர்க்கைக்கு உடன்படாத வாலிபர் கொன்று புதைப்பு!: நாட்டு வைத்தியர் வீட்டில் வேறு ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோழபுரம் அசோக்ராஜ் கொலை வழக்கில் நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே ஓரினசேர்க்கைக்கு உடன்படாத வாலிபரை போதை மருந்து கொடுத்து கொலை செய்து வீட்டில் சடலத்தை புதைத்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வந்த அசோக்ராஜ் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையை மூடி மறைப்பதற்காக தனது வீட்டிலேயே நாட்டு வைத்தியர், அசோக்ராஜ் உடலை குழி தோண்டி புதைத்து உள்ளார். தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, ‘அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவதால் சோழபுரத்தை சேர்ந்த கேசவமூர்த்தி என்ற வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்.

நான் இறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம்’ என அசோக்ராஜ் எழுதியது போல கடிதம் ஒன்றை தபால் மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் அசோக்ராஜ் உடல் கேசவமூர்த்தி வீட்டில் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், நாட்டு வைத்தியர் வீட்டில் அசோக்ராஜ் உடலை மீட்க தோண்டியபோது மேலும் ஒரு மண்டை ஓடு கிடைத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விசாரணையின் போது கடந்த ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன அனாசின் என்பவரது மண்டை ஓடு என தெரியவந்தது. நாட்டு வைத்தியர் வீட்டில் தஞ்சை மாவட்ட எஸ்.பி. நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சித்த வைத்தியரின் வீட்டின் பின்புறம் தோண்ட உத்தரவிடப்பட்டுள்ளது. கேசவமூர்த்தி வீட்டின் பின்புறம் வேறு ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய தோண்ட ஆணையிடப்பட்டுள்ளது.

The post ஓரினச்சேர்க்கைக்கு உடன்படாத வாலிபர் கொன்று புதைப்பு!: நாட்டு வைத்தியர் வீட்டில் வேறு ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Tanjore District ,Kumbakonam ,Cholapuram ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...